பூதப்பாண்டி – நவம்பர் – 26-
தடிக்காரன் கோணத்தை அடுத்த குட்டி பொத்தை பகுதியை சேர்ந்தவர்கள் பெர்லின் சேம் (32), பெல்ஜின் (28) இவர்கள் இருவரும் அண்ணன் தம்பி களாகும் இவர்கள் இவரது தந்தை பெருமாளின் இறப்பிற்க்கு பின்பு ஒரே வீட்டில் வசித்து வந்தனர் இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவர்களுடைய சகோதரி மெர்சியா (30) என்பவரது மகளிற்க்கு சடங்கு நிகழ்ச்சி வைத்திருந்ததாகவும் அந்த நிகழ்ச்சிக்கு தாய்மாமன் என்ற முறையில் பெர்லின் சேம் சென்று வந்ததாகவும் பெல்ஜின் செல்லாமலும் இருந்து வந்துள்ளார். இது குறித்து இருவருக்குள்ளும் நீ ஏன் சென்றாய் என்றும், ஏன் செல்லவில்லை என மாறி மாறி கேட்டு வாய் தகராறு ஏற்படவே பெல்ஜின் தகாத வார்த்தையால் பேசி தான் வைத்திருந்த கத்தரி கோலால் பெர்லின் சேமுனுடைய முதுகு மற்றும் தோள்பட்டையில் குத்தியதாகவும் படுகாயமடைந்த பெர்லின் சேம் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் கீரிப்பாறை போலீசார் பெல்ஜின் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள் மருமகள் வீட்டு விசேசத்திற்க்கு சென்ற தாய் மாமனுக்கு ஏற்ப்பட்ட கத்திகுத்து இந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.