நாகர்கோவில் நவ 24
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலசங்கரன் குழி முதல் நிலை ஊராட்சி யில் நடந்த கிராம சபை கூட்டம் ஊராட்சித் தலைவர் முத்து சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி சுற்றுவட்டாரத்து கிராமங்களில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மேலச் சங்கரன்குழி முதல் நிலை ஊராட்சியில் பொது மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சிறப்பாக செய்து நல்ல முறையில் பணி செய்து வரும் ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணனுக்கு ஊராட்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.