நாகர்கோவில் நவ 7
நாம் தமிழர் கட்சி சார்பாக நாகர்கோவில் தொகுதி நிர்வாகி கலை அரசு முன்னிலையில் நாகர்கோவில் வடக்கு தொகுதி தலைவர் தனுஷ் குமார் சட்டமன்ற பேரவை மதிப்பீடுக்குழு தலைவரிடம் நாகர்கோவில் மாநகராட்சியின் தரமற்ற சாலை பணிகள் குறித்தும், விதிமீறல்கள் குறித்தும் புகார் மனு வழங்கினார்.
அவர் வழங்கிய புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :-
நாகர்கோவில் மாகராட்சி மாமன்ற கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டு நடத்தப்படும் பணிகள் அனைத்தும் தரமற்று உள்ளன. அப்பணிகளுக்கு மாநகராட்சி மேயர் 13% இலஞ்சமாக பெற்று வருவதாக ஒப்பந்ததாரர்கள் மத்தியி பேசப்படுகிறது. இதனால் தான் மாநகர பணிகள் தரமற்று இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. எடுத்துகாட்டாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புள்ள சாலை செப்பனிடப்பட்டு சுமார் 1 மாத காலத்தில் முழுவதுமாக சேதமடைந்துவிட்டது. தற்போது ஒப்பந்ததாரருக்கு பணியின் குறைபாடுகளை சரி செய்வதற்கான கால அளவு, ஒப்பந்த நிபந்தனைப்படி உள்ளதால் ஒப்பந்ததாரர் சாலையில் விழுந்த குண்டுகளை அடைத்து சரி செய்தார். இதே பணியை ஆறு மாத காலத்திற்கு பிறகு செய்ய மாநகராட்சி திட்டமதிப்பீடு தயாரிக்க வேண்டியது வரும். இவ்வாறு மாநகராட்சி தரமற்ற பணிகளை தொடர்ந்து செய்வதால் அதிகப்படியான மாநகர பணிகளை செய்து அதன்மூலம் 13% இலஞ்சம் தொடர்ந்து பெறலாம் என்ற எண்ணத்துடன் மேயர் செயல்பட்டு வருகிறார் என்ற சந்தேகத்தை வலு வடைய செய்கிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போடப்பட்ட சாலைகளில் குண்டு விழுந்த புகைப்படத்தை இதில் இணைத்துள்ளேன்.
மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பு சாலை போடுவதற்கான டென்டர் வெளியிட்டத்தும் அதில் உள்ள குறைபாடுகளை தெளிவாக சுட்டிகாட்டி 11/07/2024 அன்று மாநகராட்சியில் நடைபெற்ற மேயர் குறைதீர்பு கூட்டத்தில் புகார் மனு எண்: 665 வழங்கியிருந்தேன். அதற்கு 4 மாதங்களாகியும் இன்று வரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை. அந்த புகார் மனுவின் முக்கிய குற்றசாட்டே தொழில்நுட்ப இசைவு வழங்க அதிகாரமற்ற பொறியாளரை வைத்து தொழில்நுட்ப இசைவு வழங்கியிருந்தது தான் மாநகராட்சியின் இதுபோன்ற அலட்சியமான பணிகளால் மாநகர மக்களின் வரிப்பணம் வீணாவது மட்டுமின்றி விபத்துகளாலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
நாகர்கோவில் மாநகராட்சியின் பல தெருக்களில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பேவர் ப்ளாக் கற்கள் பதிக்கப்பட்டது. எந்தெந்த தெருக்களில் எல்லாம் பேவர் ப்ளாக் கற்கள் பதிக்கப்பட்டிருந்ததோ அங்கெல்லாம் இந்த மாமன்றம் கூடுவதற்கு முன்பு வரை எந்த பணியும் இல்லாமல் நல்ல முறையில் இருந்து வந்தது. பேவர் ப்ளாக் கற்கள் ஒரு தெருவில் பதிக்கப்பட்டால் அந்த தெருவின் சாலைகள் முழுமையாக பணி நிறைவடைந்த சாலையாக கருதப்படுகிறது. ஏனெனில் ஏதேனும் குழாய்கள் பதிக்க வேண்டும் என்றாலும் கற்களை கழற்றிவிட்டு குழாய் பதித்தபின் மீண்டும் அதே கற்களை பதித்துவிடலாம். சாலை பராமரிப்பு செலவுகள் மட்டுமே இதனால் ஏற்படும். இதனால் தான் அந்த சாலைகள் நிரந்தர பணியற்ற சாலைகளாக கருதப்படுகிறது. இந்த பேவர் ப்ளாக் பதியப்பட்ட சாலைகளில் மீண்டும் பணிகள் செய்ய வேண்டாம் என்பதால் வருவாய் இழப்பு தவிர்க்கப்படுகிறது. மேலும் சாலையின் உயரம் அதிகரிப்பது தடுக்கப்படுகிது. இதனால் வீடுகளுக்குள் மழைநீர் தேங்குவது கட்டுப்படுத்தப்படுகிறது.
ஆனால் நாகர்கோவில் மாமன்றம் கூட்டம் ஆரம்பமான பிறகு தனக்கு சாதகமான ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து பேவர் ப்ளாக் கற்களை திருடிவிட்டு 5 வருடத்திற்கு ஒருமுறை பணி செய்யும் காங்கிரீட் சாலையாக மாற்ற கோரி தீர்மானம் நிறைவேற்றி இலஞ்சம் பெறுவற்காகவே பணி செய்து மக்கள் பணத்தை வீணடிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் காங்கிரீட் தளங்கள் போடப்பட்டத்தில் அதன் அடிதளம் வரை மழையில் கரைந்து சென்று விடுகிறது. அதற்கான புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. எனவே பணிகளில் நடந்துள்ள குறைபாடுகளை கண்டறிவதோடு இந்த ஊழலுக்கு சாதகமாக செயல்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேயர் மீது நடவடிக்கை எடுப்பதோடு மாமன்ற உறுப்பினர்களில் பலர் மாமன்ற கூடிய சில நாட்களில் 30 இலட்சத்தூக்கு மேல் மதிப்புள்ள சொகுசு வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மேயர் உறவினர்கள் விலை உயர்ந்த பகுதிகளில் ஆடம்பர வாழ்கை வாழ்ந்து வருகிறார்கள். எனவே இவர்கள் மீது முழுமையாக விசாரணை செய்து நடவடிக்கை கை எடுக்கும் வரை மேயர் மாமன்ற கூட்டம் நடத்த விடாதப்படி உத்தரவு பிறப்பிப்பதோடு வருங்காலங்களில் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுப்பதற்கு தகுதியற்றவகள் என கூறி தேர்தலில் நிற்க தடையாணை பிறபிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உடன் நாகர்கோவில் தொகுதி பொறுப்பாளர்கள் பிரபு, ரெனோ திலக், சொக்கலிங்கம், ஜாண், ஆறுமுகம், ஷாஜி, ஹார்வின் மற்றும் இளைஞர் பாசறை நிர்வாகிகள் நாகராஜன், ஜெனித் பிரதீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



