வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களிலும் 1434 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2025 தொடங்கப்படுவதை தொடர்ந்து குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் வே.இரா.சுப்புலெட்சுமி. இ.ஆ.ப. இன்று (21.05.2025) பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டார். இந்நிகழ்வில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி வி.அமுலு விஜயன். குடியாத்தம் ஒன்றியக்குழுத்தலைவர் சத்யானந்தம், குடியாத்தம் நகர்மன்ற தலைவர் சௌந்தரராசன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ. செந்தில்குமரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மதுசெழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



