தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் தெய்வசெயல்புரம் அருகில் வடக்கு காரச்சேரி கிராமத்தில் பருவ மழை கால கால்நடைகள் சிறப்பு மருத்துவ முகாம் தெய்வசெயல்புரம் கால்நடை மருந்தகம் சார்பில் வடக்கு காரசேரி ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் கணேசன் தலைமையில் , கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் மருத்துவர் ஆண்டனி சுரேஷ் அறிவுறுத்தலின்படிகால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த பருவ மழை கால கால்நடைகள் முகாமை கால்நடை உதவி மருத்துவர் கோ.காந்தமலை கால்நடை பராமரிப்பு உதவியாளர் வள்ளிநாயகம், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை பணியாளர்கள் சிவபிரகாஷ் மிஸ்ரா, மற்றும் கணேசன், வடக்கு காரசேரி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கால்நடைகள் மழைகாலத்தில் நோய் தொற்றிருந்து பாதுகாப்பது குறித்து ஆலோசனைகளை மருத்துவர் காந்த மலை வழங்கி சார் மேலும் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் குடற்புழு நீக்கம் செயற்கை முறை கருவூட்டல் மற்றும்ஆண்மை நீக்கம் தாது உப்பு கலவை வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.



