தருமபுரி அடுத்த பாரதிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஸ்ரீ கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரி, அருணாச்சல இண்டேன் கேஸ் ஏஜென்சி மற்றும் அம் இரா இவி இணைந்து நடத்திய தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீ தடுப்பு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு முகாம் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியின் நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் சாய் சுந்தர் அருணாச்சல இண்டேன் கேஸ் ஏஜென்சி, பாண்டியன் ராஜன் ஜெய் செக்யூரிட்டி, கௌதம் அம் இரா இ வி ஆகியோர் கலந்து கொண்டு ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியின் மாணவிகளுக்கு தீ விபத்தை தடுப்பது குறித்து செயல்முறை வடிவில் செய்து காட்டினர். இதில் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.



