நாகர்கோவில், மே 5 –
குமரியில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பலால் வழக்கறிஞர் மற்றும் அவருடைய குடும்பம் தாக்கப்பட்ட சம்பவம். வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்த போலீசார்.
யூடியூபில் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் குறித்து சொத்து வாங்கிய விவரங்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் விற்கும் லேகியம் அனுமதி இல்லாதது என ஆதாரங்களுடன் பதிவிட்டதால் கொலை செய்ய முயன்றபோது அக்கம் பக்கத்தினர் திரண்டு ஆயுதங்களுடன் வந்த கும்பலை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கோழிப்போர்விளையை சேர்ந்த வழக்கறிஞர் ஏ பி நெல்சன் என்பவர் யூ டிபில் ஒரு சில கட்சித் தலைவர்கள் செய்யும் ஊழல் மற்றும் அராஜகங்களை ஆதாரங்களுடன் வெளியிட்டு வந்தார். இது தொடர்பாக அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து கொலை மிரட்டல்கள் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. சீமான் திமுகவிடம் இருந்து தேர்தல் நிதியாக ரூ. 50 கோடி மதிப்பிலான சொத்தை குறைந்த விலைக்கு தனது மனைவி பெயரில் வாங்கியதாகக் குற்றம் சாட்டிய நெல்சன், அதே வீடியோவில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் ஒருவர் யானை கவளம் என்ற லேகியம் விற்பனை தொடர்பாக உரிய அனுமதி இன்றி விற்பனை செய்து வருவதாகவும் அது தொடர்பாக தொலைக்காட்சியில் வெளியான செய்தியின் அடிப்படையில் பதிவிட்டு இருந்தார்.
இன்டர்நேஷனல் பக்கலோரியட் என்ற அமெரிக்கன் ஸ்கூல் சர்வதேச தரத்திலான பள்ளி ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு ஆங்கிலம், பிரென்ஞ்ச் ஸ்பானிஷ், ஆகிய மொழிகள் மட்டுமே கற்பிக்கப்படுகிறது என்பதும் தமிழுக்கு அங்கே இடமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் பெரும்பாலான மாணவர்கள் அமெரிக்கா உட்பட வெளிநாட்டு மாணவர்கள் ஆகும்.
இது சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா பகுதியில் தலைமையாக கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை சேர்ந்த 94 மாணவர்களும் சுமார் 500க்கும் மேற்பட்ட வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்களும் வெறும் 57 இந்திய மாணவர்கள் உட்பட சுமார் 700 மாணவர்கள் அப்பள்ளியில் பயின்று வருவதும் அதில் இரண்டு மாணவர்களில் ஒன்று சீமானின் மகனும் மற்றொன்று அவரது மைத்துனியின் மகனும் ஆகும் என்று கூறப்படுகிறது. அதில் வருட கட்டணமாக வளர்ச்சி கட்டணம் உட்பட சுமார் 40 லட்சங்கள் வரை கட்டணம் செலுத்தி படிக்க வைத்து வருவதாகவும் அதற்கு சீமானுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பதை சிந்திக்க வேண்டும் என்றும் தமிழ் தமிழ் என்று கூறும் சீமான் தனது மகனையும் தனது மைத்துனியின் மகனையும் வெளிநாட்டு இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வருகிறது எப்படி என்பது உட்பட பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
இது பொதுமக்கள் மத்தியில் பெருமளவில் பரவி நாம் தமிழர் கட்சியின் பெயர் பாதிக்கப்படும் விதத்தில் அமைந்ததாகவும் கட்சியின் நிர்வாகி விற்பனை செய்யும் லேகியம் தொடர்பாக தனது விற்பனை பாதிக்கிறது என்று கருதிய நாம் தமிழர் உறுப்பினர் ராஜபோரன் தனது கட்சித் தலைவர்களான சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகியோரிடம் முறையிட்டதாகவும் அவர்கள் மேற்படி பதிவுகள் தொடர்பாக கோபத்துடன் இருந்ததாகவும் அவர்கள் மூலம் வழக்கறிஞர் நெல்சனுக்கு மிரட்டல்கள் வரும் வாய்ப்பு இருந்ததாகவும் கூறப்படும் நிலையில்
பெண் தலைமையில் ஆயுதங்களை மறைத்து வைத்து கொண்டு சென்ற கும்பல் தங்களது தலைவர்கள் சீமான் மற்றும் துரைமுருகன் தங்களை பேச்சுவார்த்தை நடத்த அனுப்பியதாகவும் லேகியம் தொடர்பாக பேச வேண்டும் என்று கூறி அவரது வீட்டுக்குள் புகுந்து பேச்சு வார்த்தை என்ற பெயரில் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது ஆயுதங்களால் தாக்கவும் முயன்று உள்ளனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஒரு உடற்கட்டமைப்பாளரே இவ்வாறு வன்முறையில் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது எனப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராஜா பரோன் எந்த ஆட்களையும் துணைக்கு கூப்பிட்டு போல, நெல்சன் முன்னாடியே ஆட்களை சேர்ந்து வெச்சுருக்கான். அந்த ஆளு கூட ஒண்டிக்கு ஒண்டி நின்னு பாறு அவர் மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டு தான் ஆத்திரத்திற்குக் காரணம் என அவரது ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர். கட்டழகு மேனி ராஜா பரோனுக்கே இந்த அடின்னா, நம்ம சாட்டையெல்லாம் இந்த மாதிரி சம்பவத்துல சிக்கிருந்தா கூறு போட்டுருப்பானுக போலயே என ஆதரவாகவும் கருத்துக்கள் பகிரப்பட்டன. அரசியல் கருத்து மோதல்கள் கைகலப்பாகவும், அரிவாள் மிரட்டலாகவும் மாறியிருப்பது சமுதாயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய வன்முறைகளைத் தவிர்க்கக் கட்சித் தலைவர்கள் தங்கள் தொண்டர்களுக்கு முறையான வழிகாட்டுதல்களை வழங்குவது அவசியம் எனவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் வேறு மாவட்டங்களில் மட்டுமே இது போன்ற கொலை கும்பல்கள் ஊடுருவி கொலை சம்பவங்களில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் தற்போது தமிழகத்திலேயே மிகவும் அமைதியான மாவட்டமாக திகழும் குமரி மாவட்டத்திலும் இதுபோன்ற ரவுடி கும்பல் ஊடுருவி வழக்கறிஞர் மீதே கொலை வெறி தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக குமரி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் சட்டம் ஒழுங்குக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதன் மூலம் சட்ட ஒழுங்கு பெருமளவு சீரடைந்து மிகவும் அமைதியான சூழல் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர், பிரதமர் மோடி, தவெக தலைவர் விஜய் ஆகியோரின் பிரச்சாரத்திலும் கூட மிகச்சிறந்த பாதுகாப்பு அளித்து காவல்துறையினரின் திறமையை தமிழகமே உற்று நோக்க செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தலைவர்களின் தூண்டுதல் பெயரில் தான் இது போன்ற சம்பவம் நடந்ததா என்பது குறித்து புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி உத்தரவின் பெயரில் சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோக்கள் வெளியானது போலீசாரின் விசாரணைக்கு மிகவும் பக்கபலமாக இருப்பதாக கூறப்படுகிறது.
வழக்கறிஞர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தக்க நடவடிக்கை எடுத்து அமைதியான குமரி மாவட்டத்தில் இதுபோன்ற வன்முறை கும்பலின் கொடூரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.



