கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , அவர்கள்,
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் .கே.கோபிநாத், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர்.தே.மதியழகன் ஆகியோர் முன்னிலையில் 423 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். உடன் மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு} சேலம், .ஆ.லதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் .கௌரிசங்கர், நகர மன்ற தலைவர் .பரிதா நவாப் உள்ளிட்ட பலர் உள்ளனர்.