குமரி மாவட்டம் கீரிப்பாறை லேபர் காலணி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் அப்பகுதியில் ஒரு ஆட்டை சிறுத்தை இழுத்து சென்று விட்டதாகவும் கூறப்படுவது முற்றிலும் தவறு என்றும் தாங்கள் அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டதில் சிறுத்தை நடமாட்டம் இல்லை எனவும் ஆகவே கீரிப்பாறை சுற்று வட்டார மக்கள் சிறுத்தை குறித்து பீதி அடைய வேண்டாம் என குமரி மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது.



