நாகர்கோவில் அக் 15
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை வணிகர் தெருவை சேர்ந்தவர் முத்து வயது 44 சாக்கு வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் வீட்டில் சிலிண்டரில் எரிவாயு கசிவு ஏற்பட்டு கொண்டிருந்தது. பதறி போன முத்து அதை சரி செய்வதற்கு பக்கத்து வீட்டுக்காரரான சீத்தாராமை உதவிக்கு அழைத்தார். சீத்தாராம் ரெகுலேட்டரை கழற்றி சரி செய்யும் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென தீப்பிடித்தது. இதில் முத்து, முத்து மனைவி சுமதி வயது41, கேஸ் சரி செய்ய வந்த பக்கத்து வீட்டுக்காரர் சீத்தாராம் வயது 40 முத்துவின் உறவினர் பிரேமா வயது 47, சிறுவன் ரக்சன் வயது 2, உள்பட ஐந்து பேருக்கு படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் நாகர்கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அக்கம் பக்கத்தினர் சேர்ந்து தீயை அணைத்தனர். கேஸ் தீப்பிடித்தது தகவல் அறிந்ததும் சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிலிண்டரில் எப்படி கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்தது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.