By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிற்றார் அணை பகுதியை சுற்றுலா பகுதியாக
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சிற்றார் அணை பகுதியை சுற்றுலா பகுதியாக
கனஂனியாகுமரிமாவட்டம்

சிற்றார் அணை பகுதியை சுற்றுலா பகுதியாக

Last updated: October 15, 2024 11:00 am
October 15, 2024
36 Views
Share
SHARE

 

நாகர்கோவில் – அக்- 15,

 

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலூகா – சிற்றார் அணை இரண்டிற்குட்பட்ட சுற்றுலா மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் வழி நடத்துதல் பொறுப்புகளை கடையால் பேரூராட்சி வசம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்க்கொள்ள மாவட்ட ஆட்சியர் இடம் கடையால் பேரூராட்சி தலைவர் ஜூலியட் சேகர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :-

 

கன்னியாகுமரி மாவட்டம் – விளவங்கோடு தாலூகா, கடையால் – களியல் வருவாய் கிராமங்களுக்குட்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய கடையால் பேரூராட்சி என்பது முற்றிலும் மலைப்பகுதிகளையும் சிறிதும் பெரிதுமான ரப்பர் தோட்ட காடுகளையும்கொண்ட தமிழகத்திலேயே பரப்பளவில் பெரியதும் கேரள எல்லையோரமாக அமைந்துள்ளதுமான பேரூராட்சியாகும்.

 

இப்பேரூராட்சிக்குட்பட்ட பகுதிக்குள் சிற்றார் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய இரண்டு அணைகளும் பேச்சிப்பாறை அணையின் ஒரு பகுதி நீர்பிடிப்பு பகுதிகளும் வருகின்றன. இவற்றுள் சிற்றார் அணை இரண்டிற்குட்பட்ட தண்ணீர் நிரம்பிய பகுதிகளை சுற்றிலும் மலைகள் அரணாக அமைந்து மிகுந்த இயற்ககை எழிலுடன் காட்சியளிக்கும் அணை பகுதிகள், சுற்றுலா ஸ்தலமாக அறிவிப்பதற்க்கு பொருத்தமான பகுதியாகும் . பெருமழை காலங்களில் மேற்கண்ட அணை இரண்டில் தேங்கும் நீரின் அளவு அதிகரித்து அணையில் பெருக்கப்படும் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டி கேரள பகுதிக்குள்ளும் தண்ணீர் புகுந்து தேங்கி நிற்பதை காண முடியும். கேரளாவை பகுதியை சார்ந்தார் போல இவ்வணை அமைத்துள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.

 

இந்த அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த பூங்காக்கள் 1988 வரையிலான ஆண்டுகளில் பொதுப்பணித் துறையால் சிறப்பான முறையில், 22-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்களை கொண்டு பராமரிக்கப்பட்டு வந்தது. கேரள மற்றும் தமிழக பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒவ்வொறு ஆண்டும் இப்பகுதிக்கு வந்து சென்றுள்ளனர். காண்போரை கவரும் வகையில் மலர் பூங்காக்கள் அமைக்கப்பட்டும் இருந்தது. 1988 க்கு பிறகு பொதுப்பணித் துறையில் பணியாற்றி வந்த களப்பணி ஊழியர்கள் ஒவ்வொருவராக ஓய்வு பெற்று சென்றுவிட்ட நிலையில் அனையில் ஒரேயொரு காவலர் மட்டும் மீதியிருந்தனர். அவரும் ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவ்விடம் காலியாக தற்போது யாருமற்ற நிலையில் சிற்றார் அணைப்பகுதிகள் உள்ளது. பூங்கா அமைந்திருந்த பகுதிகளோ முழுமையாக அடர்ந்த காடாக மாறி புதர்கள் மண்டி காணப்படுவதால் காட்டு பன்றிகள் மற்றும் பாம்புகள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி அப்பகுதியை தாங்களின் புகலிடமாக மாற்றி கொண்டு விட்டன.

பூங்காக்கள் சேதமடைந்து பல ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் கடந்த 2001 ல் நடந்த சட்டபேரவை தேர்தலில் மக்கள் பேராதரவோடு தங்களது தலைமையிலான அரசு பெறுப்பேற்ற இரண்டாவது மாதத்திலேயே அமைச்சரவையில் இடம் பெற்ற எங்களது மாவட்டத்தை சார்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களை சந்தித்து பேசி மாவட்டத்தில் மேலும் ஒரு சுற்றுலா ஸ்தலம் அமைப்பதற்க்கான வாய்ப்புகளை இருப்பதை பற்றி எடுத்து கூறினோம். அவரும் மிகுந்த ஆர்வத்துடன் அன்றைய சுற்றுலா துறை அமைச்சர் அவர்களை சந்தித்து மேற்குறிப்பிட்ட பகுதிகளை பார்வையிட கேட்டு கொண்டார். அதனடிப்படையில் இரு அமைச்சர்களுமாக சுற்றுலா பூங்கா பார்க் அமைய வேண்டிய பகுதிகளை பார்வையிட்டதுடன் அப்பகுதிகளை மேம்படுத்துவது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களிடம் பேசி இப்பிரச்சனணக்கு தீர்வு காணலாம் என்று சொல்லி சென்றார்கள். இந்நிலையில் தான் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்தது. பெரும்பாண்மையான மக்கள் ஆதரவுடன் எங்களது நிர்வாகம் பெறுப்பிற்க்கு வந்தது. குமரி மாவட்டத்திலேயே எல்லா வகைகளிலும் சிறந்த முறையில் , ஊழலற்ற நேர்மையான நல்ல நிர்வாகத்தை கடையால் பேரூராட்சி நடத்தி வருகிறது.

கடையால் பேரூராட்சி நிர்வாகம் அனைப்பகுதி பூங்காக்களை சீரமைத்து செயல்படுத்துவதற்க்கான அனுமதியை மாவட்ட நிர்வாகத்திடம் கேட்பது என எடுத்த தீர்மானத்தின்படி அமைச்சர் , மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் இவ்விரத்தை தெரிவித்தோம். அவர்களும் அதை வரவேற்றதுடன் தொடர்ந்து பல்வேறு தடவைகள் அமைச்சருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அரவிந்த் ஆகியோர் அணையில் பூங்கா அமைப்பதற்க்கான சீரமைக்கப்பட வேண்டிய இடங்களை பார்வையிட்டனர். பேரூராட்சிக்கு ஒரு சில ஆலோசனைகளையும் வழங்கினார்கள். அதன் அடிப்படையில் காடாக கிடந்த பகுதிகளை கடையால் பேரூராட்சி களப்பணியாளர்களை கொண்டு வெட்டி அகற்றி புதர்களையெல்லாம் மாற்றி சமநிலைக்கு கொண்டு வந்தோம்.

பூங்கா அமைப்பதற்கான இடங்களை அளவீடு செய்து மலர் பூங்காக்கள் எப்பகுதியில் அமைப்பது , நீச்சல்குளம் மற்றும் சிறுவர் பூங்காக்களை அமைப்பதற்க்கு வேண்டிய இடங்களை கண்டறிந்தோம் . கேரளாவிலுள்ள பல்வேறு அணைகளில் பூங்கா பகுதிகளை உலக தரத்தில் சீரமைத்த சுற்றுலா வல்லுநர்களை நேரடியாக தொடர்பு கொண்டு பேசினோம் அவர்ளும் அதற்கான ஆலோசனைகளை வழங்கினர். மாவட்ட ஆட்சியர் இது சம்மந்தமாக அரசிற்க்கு பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

எங்களது பகுதி என்பது அதாவது அணையை சுற்றியுள்ள ஊர்கள் என்பது பழங்குடியின மக்ளும், கூலித் தொழிலாளர் குடியிறுப்புகளும் நிறைந்து காணப்படும் பகுதியாகும் . பெரும்பான்மையான மக்கள் புறம்போக்கு நிலங்களில் வாழ்கிறார்கள். அவர்களில் ஒரு சிலருக்காவது சிற்றார் அணைப்பகுதி சுற்றுலா பகுதியாக அறிவிக்கப்பட்டால் வேலைவாய்ப்பு கிடைக்கும் .

 

தற்போது பொதுப்பணித்துறை தரப்பில் அவர்களாகவே சுற்றுலா மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. பொதுப்பணித்துறையால் சுற்றுலா மேம்பாடு திட்டத்தை தற்போதைய சூழலில் நல்ல முறையில் செயல்படுத்த இயலாது என்பது பல தடவை பரிசீலிக்கப்பட்ட விஷயமாகும். என்பதை கவனத்தில் கொண்டு வருகிறோம் . தமிழக அரசிற்கும் , பேரூராட்சிக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நல்ல பெயரை சம்பாதித்து தருவதற்க்கு சிற்றார் அணைப்பகுதி பூங்காக்கள் அமைக்கும் பணியினையும் சாகச படகு சவாரி சர்வீஸ் ஆரம்பித்து செயல்படுத்துவது போன்ற பொறுப்புகளை கடையில் பேரூராட்சி வசம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கை எடுக்கும் படி அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
மாற்றுக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்
சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் உயர் கோபுரம்
முரடகுளம் கான்கிரீட் சாலையை வடிகால் வசதி
கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் வருஷாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற வழக்கறிஞர்கள் கைது

July 11, 2024
66 Views
800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அக்னி தீர்த்த கிணறு
மருத்துவமனையில் நடைபெற்ற விருது வழங்கும் விழா
கையை பிளேடால் கிழித்தவர் மீது வழக்கு
மதுரையில் தொடர் சர்ச்சை எதிரொலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account