திருப்பத்தூர், ஆக. 30 –
திருப்பத்தூர் மாவட்டம் மடவாளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் க. சிவசௌந்திரவல்லி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க. தேவராஜி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
உடன் வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன், இணை இயக்குனர் மருத்துவம் மரு. ஞானமீனாட்சி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு. வினோத்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) முருகன், ஒன்றிய குழு தலைவர்கள் விஜயா, திருமதி, முன்னாள் ஆவின் பால் வளத்துறை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராசேந்திரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



