சேலம்
சேலம் மாவட்டம், திமுக பவள விழா ஆண்டை முன்னிட்டு 29 வது கோட்ட திமுக மற்றும் சேலம் ஸ்பைக்கர்ஸ் வாலிபால் கிளப் இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி சேலம் புனித பால் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் பங்கு பெற்றனர். அமைச்சர் பேசுகையில் மாணவர்கள் நமது நாட்டிற்கு மிகப்பெரிய ஒரு பலம் என்றும் மாணவர்கள் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை விடாமுயற்சியுடன் விளையாட்டிலும்,வாழ்க்கையிலும், கல்வியிலும் வெற்றி வாகை சூட்ட வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார். வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சிக்கு சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகர செயலாளர் பா.ரகுபதி, புனிதபால் மேல்நிலைப்பள்ளி முதல்வர் , பகுதி துணை செயலாளர் எஸ்.பி.பூபதி, 29 வது கோட்ட வார்டு செயலாளர் கே.என். சிவக்குமார், மாவட்ட கைப்பந்து அசோசியேசன் செயலாளர் சண்முகவேல், வேங்கையன்,ஐ.யாகூப் ஷெரீஃப், ரா.பாலாஜி, பி. நாராயணன், பாலமுருகன், பாலதண்டாயுதம், தருண், பிரியதர்ஷன், செங்கோடன், பழனி, ஜீவானந்தம், பன்னீர்செல்வம், முருகன் மற்றும் கோட்ட கழக செயலாளர்கள் திமுக நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர்.