நீலகிரி மாவட்டத்தை போதையில்லா மாவட்டமாக மாற்ற காவல்துறை மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் கிராமப் பகுதிகள். பள்ளி கல்லூரிகளில் சமூக விழிப்புணர்வு போதை ஒழிப்பு பிரச்சார பணிகளை மாவட்ட காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் மாவட்ட முழுவதும் போதைப் பொருள் ,புகையிலை கஞ்சா போன்றவற்றை விற்பனை செய்பவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்து வரும் நிலையில் கோத்தகிரி பகுதியில் குட்கா பொருட்கள் காய்கறி சரக்கு வாகனங்களில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் வனக்குமார், யுவராஜ் ,பாலமுருகன், ஜேக்கப் உள்ளிட்ட காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோத்தகிரி பகுதியில் குட்கா பொருட்கள் சமவெளி பகுதிகளில் இருந்து காய்கறி ஏற்றி வரும் சரக்கு வாகனங்களை சோதனை செய்தபோது ஒரு சரக்கு வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட 3 ஆயிரம் குட்கா பாக்கெட்டுகள் 60 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து வாகனத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தை சேர்ந்த முஜிப்பூர் ரஹ்மான் வயது 40,பாக்குமர தெருவை சேர்ந்த ஃபாருக் வயது 44 , சிறுமுகை ரோடு சந்தை கடை பகுதியை சார்ந்த முபாரக் அலி 34 ஆகிய மூவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து குட்கா கடத்திய மூவரையும் கோர்த்துகிரி மாஜிஸதிரட் முன்னிலையில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.