மயிலாடுதுறையில் பாஜகவினர் காவிரி ஆற்றில் தூய்மைப்பணி:-
இந்தியாவில் தூய்மை பாரதம் திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகிறது. இதனை கொண்டாடும் வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தூய்மை இந்தியா திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோடி.கண்ணன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் கோவி சேதுராமன், நாஞ்சில் பாலு, ஸ்ரீதர், மயில்(எ)ரவி, செல்வகுமார், ஈஸ்வரன், மகளிரணி பிரியா உள்ளிட்ட ஏராளமானோர் இன்று தூய்மை பணியில் ஈடுபட்டனர். இன்று மஹாலயா அமாவாசை தினம் என்பதால் உலக புகழ்பெற்ற மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் அளித்து விட்டு சென்ற பின்னர் அங்கு குவிந்து கிடந்த வாழை இலை மற்றும் குப்பைகளை பாஜகவினர் கூட்டிப் பெருக்கி தன்னார்வத்துடன் அகற்றினர்.