கோவை செப்:25
கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், 86வது வார்டுக்குட்பட்ட உக்கடம், புல்லுக்காடு, சூரிய மின்னாற்றல் உற்பத்தி மையம் அருகில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தினை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில்கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
உடன் மண்டல உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், மாமன்ற உறுப்பினர் அகமதுகபீர், உதவி செயற் பொறியாளர் கனகராஜ், உதவி நகர திட்டமிடுநர் ஜெயலட்சுமி, உதவி பொறியாளர் சுந்தர்ராஜன், மற்றும்
பசுமை குழு ஓசை செய்யது மற்றும் டிஎம்எம்கே மாநில செயலாளர் சாகுல் ஹமீது ,மாநில பிரதிநிதிகள் சுல்தான் அமீர், அக்பர் அலி மாவட்ட தலைவர் சர்புதீன், மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் சிராஜுதீன், துணைத் தலைவர் அபாஸ், துணைச் செயலாளர்கள் நூர்தீன், அசாருதீன், பைசல் ரகுமான், அபு,ஆஷிக் அகமது மற்றும் அணி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.