தஞ்சாவூா், செப்.13
தி.மு.க. உயர்விலும் தாழ்விலும் தோளோடு தோள் நின்று கட்சியை காத்த தீரர்களுக்கு ஆண்டுதோறும் பெரியார், அண்ணா, கருணாநிதி, பாரதிதாசன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்ற ன. தற்போது தி.மு.க. 75-வது ஆண்டு பவள விழாவை கொண்டாடும் இந்நேரத்தில் கட்சியை 6-வது முறையாக ஆட்சியில் அமர வைத்து இந்தியாவே போற்றி வரும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் தி.மு.க. தலைவர் மு. க .ஸ்டாலின் பெயரில் இந்த ஆண்டு முதல் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இந்த ஆண்டுக்கான மு.க.ஸ்டாலின் விருது தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும் முன்னாள் மத்திய இணை மந்திரியுமான எஸ்.எஸ். பழனிமாணிக்கத்துக்கு வழங்கப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த விருது சென்னையில் நடைபெற உள்ள தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் வழங்கப்பட உள்ளது.இந்த நிலை யில் தஞ்சை சீனிவாசபுரத்தில் உள்ள வீட்டில் எஸ்.எஸ். பழனிமாணிக்கத்தை தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் அனைத்து நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளரும் எம்.பி.யுமான முரசொலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.ஜி. நீலமேகம் எம்எல்ஏ, செல்வம், தாட்கோ தலைவர் மதிவாணன், மாவட்ட அவைத் தலைவர் இறைவன், மாவட்ட துணை செயலாளர் கனகவல்லி பாலாஜி, மாவட்ட பொருளாளர் அண்ணா, மாநகர செயலாளரும் மேயருமான சண் ராமநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா, ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி, செல்வகுமார், செல்லகண்ணு, துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன், பகுதி செயலாள ர்கள் மேத்தா, நீலகண்டன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகில்வேந்தன், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராணிகண்ணன், வல்லம் நகர செயலாளர் கல்யாணசுந்தரம், வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி, மானாங்கோரை ஊராட்சி மன்ற தலைவர் மணிரத்னம், மண்டல குழு தலைவர்புண்ணியமூர்த்தி,மாநகராட்சி கவுன்சிலர்கள் தமிழ்வாண ன், செந்தமிழ்செல்வன், ஒன்றிய குழு உறுப்பினர் ஜோதிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



