நாகர்கோவில் – செப் – 08,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல். காலித் தலைமையில் மண்டல துணை செயலாளர் பகலவன், மாநில மகளிர் அணி விடுதலை இயக்க துணை செயலாளர் கலை செல்வி , மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் செர்லின் பாக்கியதாஸ் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்டோபர் – 02 . 10. 2024 (புதன்கிழமை) அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெறும் மகளிர் விடுதலை இயக்கம் ஒருங்கிணைக்கும் சிறுத்தைகளின் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு பற்றிய பல்வேறு தீர்மாணங்கள் , மற்றும் உறுதி மொழிகள் எடுக்கப்பட்டது . நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமான விடுதலை சிறுத்தை பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



