ஈரோடு செப் 5 நல்லாம்பட்டி பேரூர் கழக தி. மு.க செயல் வீரர்கள் கூட்டம் பேரூர் செயலாளர் குருசாமி தலைமையில் நடந்தது. அவைத்தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். இதில் பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறும் போது நாம் அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து கட்சி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் .கடந்த பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி அடைந்தது போல வருகிற 2026 ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் தளபதி மு க ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறினார் .
இதில் நல்லாம்பட்டி பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி துணைத் தலைவர் விஜயகுமார், கவுன்சிலர்கள் சுப்பிரமணி ,ஜெகநாதன் , ஈரோடு மாவட்ட மகளிர் தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் தேவி லோகநாதன், தொழில்நுட்ப ஒன்றிய சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் வசந்தகுமார், முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் ,ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் சதீஷ்குமார், பானுமதி மற்றும் பேரூர், வார்டு நிர்வாகிகள் உட்பட இதில் கலந்து கொண்டனர்.