வேலூர்_29
வேலூர் மாவட்டம், காட்பாடி ரோடு தோட்டப்பாளையம் , அருள்மிகு தர்மராஜா திருக்கோயிலில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் அபிஷேகமும் , ஆராதனையும் ,சிறப்பு பூஜைகளும், உற்சவர் அலங்காரமும், திருத்தேர் வீதி உலாவும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் விழா குழுவினர்கள் சி.கே. கணேசன், கவுன்சிலர் வி .எஸ். முருகன், வி.எஸ். கணேஷ் கே சி கே மணிவண்ணன் கே. கோபி ,என். ஸ்ரீனிவாசன், மற்றும் விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.