திருப்பத்தூர்:ஆக:28, திருப்பத்தூர் மாவட்ட உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் கஞ்சா புகையிலை போன்ற போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொது மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் காவல் நிலைய நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்திற்குட்பட்டு இருக்க வேண்டும் என காவல் நிலையத்தில் பணி புரியும் அனைத்து காவல் ஆளினர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கினார்.



