கரூர் மாவட்டம் – ஆகஸ்ட் – 24
கடவூர் அருகே சின்னாம்பட்டியில் புதிய பகுதி நேர ரேஷன் கடையை கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. க.சிவகாமசுந்தரி திறந்து வைத்தார்.
மாவத்தூர் ஊராட்சி ரெட்டியபட்டியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைக்கு சின்னாம்பட்டியில் இருந்து சென்று வருவதில் பெண்களுக்கு முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகுந்த சிரமமாக இருப்பதாகவும் அதனால் சின்னாம்பட்டியில் புதிய பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று திமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீராச்சாமி (எ) சுதாகர் மாவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா செந்தில்மோகன் ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தி (CPM) ஆகியோர் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. க.சிவகாமசுந்தரியிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கோரிக்கை ஏற்கப்பட்டு சின்னாம்பட்டியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் எம்.எல்.ஏ. க. சிவகாமசுந்தரிடம் பரிந்துரை செய்தார். தொடர்ந்து பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதால் புதிய ரேஷன் கடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கும் நிகழ்ச்சி மாவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா செந்தில்மோகன் தலைமையில் நடந்தது.
இதில் கடவூர் தாசில்தார் இளம்பரிதி, திமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீராச்சாமி (எ) சுதாகர், ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தி (சி.பி.ஐ) கடவூர் தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி செந்தில்மோகன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. க. சிவகாமசுந்தரி கலந்து கொண்டு புதிய பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கி பேசினார். இதில் வட்ட வழங்கல் அலுவலர் பெரியசாமி, சின்னம்பட்டியில் வனத்துறை தலைவர் ராஜலிங்கம், ஊர் நாட்டாமை மூர்த்தி, (சி.பி.ஐ.எம்) ஒன்றிய செயலாளர் பழனிவேல், துணைச் செயலாளர் குமரேசன், திமுக வழக்கறிஞரணி ராஜகோபால், கணக்கப்பிள்ளை தர்மலிங்கம், வார்டு உறுப்பினர் நாகமணி, கந்தசாமி, திமுக நிர்வாகிகள் மணி, மணிவாகம், முருகேசன், கரிகாலன், ராமமூர்த்தி, தீபன் ராஜ் மாவத்தூர் ஊராட்சி மன்ற செயலாளர் அன்பழகன் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.