திண்டுக்கல் ஜூலை: 29
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள வைவேஸ்புரத்தில் டாக்டர்.ஏபிஜ.அப்துல்கலாம் சமூக நல அறக்கட்டளையின் சார்பாக இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல்கலாமின் 9-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து
மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் பொருளாளர் முருகன் தலைமை தாங்கினார்.
ஊர் முக்கியஸ்தர் சுப்பிரமணியன் மரகன்றுகளை நட்டு விழாவினை தொடங்கி வைத்தார். இதில் பெரியோர்களும்,இளைஞர்களும் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியின் போது அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு நடப்பட்டன.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை
அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் விமல்கலாம் (எ) விஜயகுமார் சிறப்பாக செய்து இருந்தார்.