தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப் பட்டினத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். சென்னையில் இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் முகாமில் பங்கேற்ற பொது பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அதன் பின்னர் பொதுமக்களிடமிருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார். மேலும் இந்த முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். முகாமில் தகுதியான மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வின் போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமார், தாசில்தார் பாலசுந்தரம் பஞ்சாயத்து தலைவர் சொர்ண பிரியா ராமலிங்கம் (எ) துரை, துணைத் தலைவர் கணேசன், கல்லாமொழி தொழிலதிபர் ராஜதுரை மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகள், பஞ்சாயத்து அலுவலர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.