ராமநாதபுரம், ஜுலை 28-
ராமநாதபுரத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்து கண்டன உரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் கலந்து கொண்டு மத்திய அரசு தமிழகத்தில் பட்ஜெட்டில் புறக்கணித்ததை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, முன்னாள் அமைச்சர் சுப தங்கவேலன், பரமக்குடி எம்எல்ஏ முருகேசன்,ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் கார்மேகம், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே.பிரவீன், ராமநாதபுரம் நகராட்சி துணை சேர்மன் பிரவீன் தங்கம், மாவட்ட ஒன்றிய நகர் கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே ஜே பிரவீன் நன்றி கூறினார்.



