தஞ்சாவூர் ஜூலை 26
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட புதுமை பெண் திட்டம் (மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம்) தொடர்பான பணிகள் குறித்து அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:
முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டங்களில் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் உயர்கல்வியின் வளர்ச்சிக்காகவும் சமூக நலன் மற்றும் உரிமை துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் புதுமைப்பெண் திட்டம் தஞ்சை மாவட்டத்தில் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து மேற்படிப்பில் சேர்ந்து 13 ஆயிரத்து18 பேர் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 ம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அரசு பள்ளிகளில் மூலம் படிக்கின்ற மாணவிகளுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இவற்றை பயன்படுத்தி 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைகின்ற பெண்கள் தொடர்ந்து கல்லூரியில் சேர்ந்து படிப்பதை ஊக்கப்படுத்தவு ம் இடைநிற்றவை தவிர்ப்பதற்காக வும் உயர் கல்வியில் உன்னத நிலை அடைவதற்காகவும் முதல் அமைச்சர் அவர்களால் செயல் படுத்தப்பட்டு வரும் புதுமைப்பெண் திட்ட பணிகளை அனைத்து ஒருங்கிணைப்பு அலுவலர்களும் தொய்வின்றி சிறப்பாக செயல்பட வேண்டும். என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்
கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் கூடுதல் பொறுப்பு அனுசுயா மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.