ராமநாதபுரம், ஜுலை 26-
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் அச்சுதன் வயல் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல் ஒரு திட்ட முகாமில் டிரஸ்டி அதிவீரபாண்டியன் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சூரக்கோட்டை ஊராட்சியில் இடையர் வலசை கிராமத்தில் இசிஆர் ரோட்டில் இருந்து சண்முகநாதன் கிணறு வரை திருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் சூரன்கோட்டை கிராமம் இடையர் வலசை கிராமத்தில் உள்ள பொதுமக்கள் இந்த வழியாக செல்வதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள பாபா கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகம் வந்து செல்வதால் அவர்கள் வரும் வழியில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து இருப்பதால் பக்தர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி விபத்து அபாயமும் ஏற்படும் நிலை உள்ளது. இருளை பயன்படுத்தி சில நேரங்களில் வழிப்பறி திருட்டுகளும் நடைபெறுகிறது. எனவே இப்பகுதி மக்கள் நலன் கருதி இந்தப் பகுதியில் தெரு விளக்கு அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.



