தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெண்ணாகரம் வட்டம் கிருஷ்ணா புரத்தை சேர்ந்த பாட்டியுடன் வசித்து வரும் இருதய அறுவை மேற்கொண்டுள்ள செல்வி.பிரதிக்சா என்பவரின் தொடர் சிகிச்சை பரிசோதனைக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் பெண்ணாகரம் வட்டத்தில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலர்களும் இணைந்து ரூபாய் ஒரு லட்சம் தொகை நன்கொடையாக சேகரித்து மாணவி பெயரில் தபால் நிலைய சேமிப்பு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வங்கி கணக்கு புத்தகத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாணவியின் பாட்டியிடம் வழங்கினார் உடன் வட்டாட்சியர் சுகுமார் உள்ளார்



