திருப்பத்தூர்:ஜூலை:16, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2024-2025 ஆம் கல்வியாண்டு பெருந்தலைவர் காமராஜர் 122- ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் நடைப்பெற்றது.
இந்நிகழ்விற்கு நாகராஜன் தலைமை தாங்கினார். எலவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன் முன்னிலை வகித்தார். எலவம்பட்டி அறிவகம் புலவர் சம்பத்து செவ்வாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகனா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி ஆடவர் கலைக் கல்லூரியின் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ்நாடு அரசு விருதாளர் கலைவளர்மணி செ.ரஜினி பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் மற்றும் பாரதி விருதாளர் முனைவர் P.சிவராஜி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினர் பேசுகையில்: பெருந்தலைவர் காமராஜர் குறைந்த அளவில் படித்திருந்தாலும் ஏழை மாணவர்களின் கண்ணீரை துடைத்து கல்வி கொடுத்தவர். முன்னாள் முதல்வராக இருந்து தனக்கென எந்த ஒரு சொத்துக்களையும் சேர்த்து வௌத்துக் கொள்ளாமல் சமூக தொண்டினை மதித்தவர். மதிய உணவினை வழங்கி பசியை போக்கியவர். பாராபட்சம் இன்றி எல்லோருக்கும் எல்லாம் சென்று சேர வேண்டும் என்று நினைத்தவர். மக்களோடு மக்களாக இணைந்து மக்களின் வலிகளை புரிந்து கொண்டு நடந்து கொண்ட பெரும் மாமனிதர். மக்களுக்கும் வாழ்வாதாரம் கிடைக்க வேண்டும் என்று போராடியவர். தனக்கென்று எதையும் சேர்த்து வைக்காமல் மக்களுக்காகவே எல்லாவற்றையும் தியாகம் செய்தவர். கல்விக்கண் திறந்த காமராசர் எளிமையாக வாழ்ந்தவர். மாணவர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியவர். விளிம்பு நிலை மக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர் பெருந்தலைவர் காமராஜரை எப்பொழுதும் நினைவில் கொண்டு நாம் வாழ வேண்டும் என பேசினார். இந்நிகழ்வில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ராஜேந்திரன், கணித பட்டதாரி ஆசிரியர் விஜயகுமார், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் செல்வகுமார், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பாண்டி, உடற்கல்வி ஆசிரியர் வீரமணி, ஓவிய ஆசிரியர் விஜயலட்சுமி, கணினி ஆசிரியர் ஆண்டாள், ஆய்வக உதவியாளர் சீனிவாசன் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியினை ஆங்கில பட்டதாரி ஆசிரியர் செல்வகுமார் ஏற்பாடு செய்தார். நிகழ்வின் இறுதியில் கணித பட்டதாரி ஆசிரியர் விஜயகுமார் நன்றி உரை வழங்கினார். மாணவ மாணவியரின் நாட்டுப்பண் பாடலோடு முடித்தனர்.