கிருஷ்ணகிரி ஜூன் 27: கிருஷ்ணகிரி சேலம் பைபாஸில் அமைந்துள்ள தனியார் (காவேரி) மருத்துவமனையில், காவேரிப் பட்டினம் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து கிருஷ்ணகிரி மாவட்ட மீடியா கிளப் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமை இன்று நடத்தியது. பத்திரிக்கையாளர் சங்க தலைவர் DD ராஜா, அனைவரையும் வரவேற்றார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் செந்தில்குமார், காவேரி மருத்துவமனை பொது மேலாளர் ஜோஸ், உதவி பொது மேலாளர் பிந்து கிரீஸ், சிறப்புரையாற்றினர். இதில் மாவட்ட ஆட்சியர் திருமதி. சரயு கலந்துக் கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர், கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் செய்தியாளர்கள் தொடர்ந்து களத்தில் இருந்து செய்திகளை சேகரித்து அமைதியான தேர்தல் நடைபெற ஒத்துழைப்பு வழங்கினர். தினசரி செய்தி சேகரிப்பில் ஈடுபடும் நிலையில் ஆரோக்கியத்தை கண்காணிப்பது அவசியம். செய்தியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதில் அனைவரும் கலந்துக் கொண்டு பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் செந்தில்குமார் முடிவில் நன்றியுரை ஆற்றினார். இந்த மருத்துவ முகாமில் பெங்களூரு, ஓசூர் மருத்துவமனைகளில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் கலந்துக் கொண்டு, இருதய பரிசோதனை, சர்க்கரை, இரத்த அழுத்தம், நுரையீரல் செயல்பாடு, பெண்களுக்கான கர்ப்பப்பை, கண் பரிசோதனை, எலும்பு தேய்மானம், ENT பரிசோதனை போன்ற 16 வகையான பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 85 பேர் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர். இந்த நிகழ்வில் மருத்துவர்கள் கார்த்திக்ஈஸ்வரன்,
பிரபு, ஸ்ரீராமஜெயம், மருத்துவமனை பொறுப்பாளர் கிளாரன்ஸ், உதவி பொறுப்பாளர் பிரபாகரன், பத்திரிக்கையாளர் சங்க செயலாளர் கேப்டன் சரவணன், துணை தலைவர் பாலமுருகன், துணை செயலாளர் பிரகாஷ், பொருளாளர் ஆனந்தன் , கவுரவ தலைவர் ரவி, மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் குடும்பத்தினருடன் கலந்துக் கொண்டனர்.