மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கல்லூரியில் பண்டிதமணி அரங்கில் தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் சு.காந்திதுரை தலைமையில்
தமிழ்த்துறை ஆய்வு மன்றக் கருத்தரங்கம்
நடைபெற்றது.
இக்கருத்தரங்கு நிகழ்வை மாணவி சோ.நாகலட்சுமி தொகுத்து வழங்கினார். மாணவி தி.மணிமாலா வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாணவி மா.ஆனந்தி தக்கயாகப் பரணி உரைத்திறன் என்ற தலைப்பிலும் மாணவி மு.ஆதீஸ்வரி நீதியின் தேவதையாக மடப்புரத்துக்காளி ‘ என்ற தலைப்பிலும் கட்டுரைகளை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து முனைவர்.
சு.காந்திதுரை ஆ.திலகவதி ஆகியோரின் தனிமைத்தவம் என்ற சிறுகதை நூலினையும் மாணவி நா.ரத்னப்பிரியா சிந்துசீனு அவர்களின் ராசாத்தி எனும் குறுநாவலினை அறிமுகம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஆய்வு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முனைவர்கள் அ.மோகனா ரே.கோவிந்தராஜ் உள்ளிட்ட தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மற்றும் முதுகலை மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
விழா நிறைவில் மாணவி க.முத்துப்பாப்பா நன்றியுரையாற்றினார்.