சங்கரன்கோவில். ஜூன்.22.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. சட்டமன்ற கூட்டத்தொடரில் தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு தற்போது அங்கு மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது எனவும், சங்கரன்கோவில் தொகுதியில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்பட்ட வேண்டுமென தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார். ராஜா எம்எல்ஏ கோரிக்கைக்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சங்கரன்கோவிலில் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அமைய மாவட்டத்தின் பொறுப்பு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் பரிந்துரை செய்து அதன் கருத்துருக்களை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பினால் அந்த பரிந்துரையின் அடிப்படையில் அதனை அரசு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என தெரிவித்தார்



