கோவை: ஜூன் 22
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் யோக கலையை சிறப்பாக செய்து வருகின்றனர். அந்த வகையில் பொள்ளாச்சி கோவை சாலையில் அமைந்துள்ள பி.கே.டி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் தலைமை வகித்தார் மேலும் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் பலவகை யோகா செய்து அசத்தியுள்ளனர். மேலும் நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.