கன்னியாகுமரி கடற்கரையில் எச்சரிக்கை பலகை
கன்னியாகுமரி | செப்.17:
உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக திரிவேணி சங்கமம் கடலில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம்.
கடலில் குளிக்கும்போது ஆழமான பகுதிகளுக்கு சென்று அலையில் சிக்கும் அபாயத்தைத் தடுக்கும் வகையில், திரிவேணி சங்கமம் கடற்கரையில் கடலோர பாதுகாப்புக் குழும போலீசார் எச்சரிக்கை பலகை அமைத்துள்ளனர். இன்ஸ்பெக்டர் சாந்தி முன்னிலையில் அமைக்கப்பட்ட இந்த பலகையில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இது சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என போலீசார் தெரிவித்தனர்.



