கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்
தஞ்சாவூர், செப்.14:
சோழர் கால வரலாறு, கட்டிடக்கலை மற்றும் பண்பாட்டை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், தஞ்சாவூரில் இருந்து ‘பொன்னியின் செல்வன் தி ஸ்பைஸ்ட் ரெயில்’ என்ற தலைப்பில் ஒரு நாள் சுற்றுலா பயணம் நடைபெற்றது. சுற்றுலா மேம்பாட்டு குழுமம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பயணத்தை தஞ்சாவூர் பெரிய கோவில் வளாகத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்தஞ்சையில் இருந்து ‘பொன்னியின் செல்வன் தி ஸ்பைஸ்ட் ரெயில்’ என்ற தலைப்பில் சோழர் கால வரலாற்று சுற்றுலா பயணம் தொடங்கியது. கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்..
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று புதினத்தில் இடம்பெறும் வந்தியத்தேவனின் பயணத்தை நினைவுகூரும் வகையில், தஞ்சாவூரில் தொடங்கி மீண்டும் தஞ்சாவூரில் நிறைவடையும் வகையில் இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் வீரநாராயணன் ஏரி, உடையார்குடி, கடம்பங்குடி, கும்பகோணம், திருப்புறம்பியம், நாதன் கோவில், பழையாறை, உடையாளூர் மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.
இதுகுறித்து கலெக்டர் ரேவதி கூறுகையில், தமிழ்நாட்டின் வளமான வரலாறு, கட்டிடக்கலை, பண்பாடு மற்றும் சோழர் கால பாரம்பரியத்தை சுற்றுலா பயணிகள் நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் இத்தகைய வரலாற்று சுற்றுலா பயணங்கள் ஏற்பாடு செய்யப்படுவதாக தெரிவித்தார். தஞ்சாவூரின் வரலாற்றுப் பெருமையை உலக அளவில் கொண்டு செல்லவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கவும் இந்த பயணம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினார். மேலும், சுற்றுலா பயணிகளுக்கு வல்லுநர்கள் வழிகாட்டுவார்கள் என்றும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



