தஞ்சாவூர்.ஏப்ரல் 15.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்வாய் கள் தூர் வாரும் பணிகள் மே மாத இறுதிக்குள் முடிவடையும் என்றார் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன்.
தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் ஒன்றியம் பாகவதபுரத்தில் உள்ள பட்டகாவெளி வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 4ஆண்டுகளில் டெல்டா பாசனத்து க்கு ரூபாய் 85. 97 கோடி மதிப்பீட்டில் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன
கடந்த ஆண்டுகளைப் போல நிகழாண்டும் திருச்சி, சென்னை, மதுரை மற்றும் கோவை மண்டலங் களில் உள்ள ஆறுகள் கால்வாய் கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் ரூபாய் 26.28 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது .இந்த பணிகள் வரும் மே மாதத்திற்குள் முடிவடையும். வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசன வாய்க்கால்களில் கடந்த ஆண்டை போல உரிய நேரத்தில் கடைமடை வரை பாசனத் திற்கு தண்ணீர் சென்றடையும் மழை வெள்ள காலங்களில் பயிர் களுக்கு எவ்வித சேதங்கள் ஏற்படாதவாறு விரைவாக தண்ணீர் வடிவதற்கு ஏதுவாக இந்த பணிகள் இருக்கும் என்றார் அமைச்சர் கோவி. செழியன்
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் எம் பி மான கல்யாண சுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன், மாநகர திமுக செயலரும் துணை மேருமான தமிழழகன், ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் கும்பகோணம் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவுகளுக் கான கோட்ட பொறியாளர் அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.



