விளாத்திகுளம், செப்.14:
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள பனையடிப்பட்டி தொடக்கப்பள்ளியில் 2026–2028 கல்வியாண்டிற்கான பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற இத்தேர்வில், புதிய மேலாண்மை குழு தலைவராக மகாராணியும், துணைத் தலைவராக சங்கரேஸ்வரியும் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, இராமனூத்தூர் பள்ளி தலைமையாசிரியர் இப்ராஹிம் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இடைநிலை ஆசிரியர் சாந்தி, பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் கல்வி வளர்ச்சி, மாணவர்களின் நலன் மற்றும் பள்ளி செயல்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.



