திண்டுக்கல், செப்.12.
திண்டுக்கல் மாநகரில் மணிக்கூண்டு அருகே மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திரையுலக மோகம் மற்றும் கவர்ச்சி மூலம் மக்களை மயக்கி, சமூக வலைதளங்கள் வழியாக போலியான பிம்பத்தை உருவாக்கி, போலி வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அமைத்ததாக தமிழக முதல்வர் விஜயை திமுகவினர் விமர்சித்தனர். மேலும், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சட்டமன்றத்தில் பதிலளிக்க முடியாமல் உண்மைக்கு மாறாக பேசி வருவதாகவும் குற்றம்சாட்டினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் சக்கரபாணி முன்னிலை வகித்தார். திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



