தருமபுரி, ஆக. 27:
தருமபுரி மாவட்ட பாஜக விவசாய அணி சார்பில், விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய அணி மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பாஜக மாவட்ட தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் கோஷங்களை எழுப்பினர்.
மேலும், கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால், தொடர்ந்து மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என பாஜக விவசாய அணியினர் எச்சரிக்கை விடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் பாஜக நிர்வாகிகள் மற்றும் விவசாய அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



