தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியின்படி, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அனைத்து தூய்மை பணியாளர்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உள்ளாட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணைகள் 111, 112, 113, 116, 152, 139 மற்றும் 10 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்.
ஒப்பந்தம், அவுட்சோர்சிங் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் மூலம் தூய்மை பணியாளர்களை பணியமர்த்தும் முறையை ரத்து செய்து, உள்ளாட்சி நிர்வாகமே நேரடியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
காரைக்குடி மாநகராட்சியில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அரசாணை 62(D)-ன்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும், PF மற்றும் ESI உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், தூய்மை பணியாளர்களுக்கு தேவையான தள்ளுவண்டி மற்றும் மோட்டார் வாகனங்களை முறையாக வழங்க வேண்டும் என்றும், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட கோவிலூர், தளக்காவூர், இலுப்பைக்குடி, அரியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் மாநகராட்சி ஊதியம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு AITUC சிவகங்கை மாவட்டத் தலைமையிலான பொது சுகாதார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திகாரைக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு AITUC தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



