கருங்கல், ஆக. 4 –
குமரி மேற்கு மாவட்டம் கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக சர்பில் மாநில இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து கிள்ளியூர் தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்
கோபால் தலைமை வகித்தார்.
வழக்கறிஞர் ஜெப ஜான், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஜோசப் ராஜ், பேரூர் செயலாளர்கள் ராபின்சன், அருள்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அனுலால்டாம் மற்றும் மாவட்ட இளைஞரணி துனை அமைப்பாளர் பைஜு, ஒன்றிய பொருளாளர் தங்கதுரை, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜெனே, பெஜான்சிங், ஜெனோபட் மற்றும் சேகர், கருங்கல் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் அனீஸ், மகளிர் அணி மாவட்ட தலைவர் எஃப் சி ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



