பரமக்குடி, ஆக. 4 –
பரமக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட மின்னணு நூலகக் கட்டிடத்தின் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து புதிய மின்னணு நூலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார். ரூ.1.85 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட இந்த நூலகக் கட்டிடம் மாணவர்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கல்வி பயில உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு திறப்பு விழா புதிய மின்னணு நூலகக் கட்டிடத்தை அனைவரும் பார்வையிட்டனர்.



