கோவை, ஆக. 03 –
மகிழ்ச்சியான வாழ்வியலுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் யோகா இன்றியமையாதது என்பதை உணர்த்தும் விதமாக மாவட்ட அளவிலான யோகா போட்டி ஒவ்வொரு வருடமும் தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி சார்பாக நடத்தப்பட்டு வருகிறது,இதன் தொடர்ச்சியாக இந்த வருடம் கோவை பேரூர் பகுதியில் தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமியின் நிறுவனர் சதீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மேற்கண்ட இந்த போட்டியில் கோவை மாவட்டத்திலிருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட பள்ளியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். காமன், ஸ்பெஷல் என்ற பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்த போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பாக யோகா செய்து அசத்தினர்.



