இரணியல், ஆக. 3 –
இரணியல் அருகே உள்ள கண்டன்விளை அடுத்த இலுப்பவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் ரங்கன் மகன் சஞ்சய் (19). சஞ்சய் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். வெளியூர் தங்கி நின்று படிக்க விருப்பம் இல்லை என்று பெற்றோர் இடம் கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் தற்போது ஊருக்கு வந்தவர் நேற்று மாலை வீட்டுக்கு வெளியே உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் உள்ள மரத்தின் நைலான் கயிறு மூலம் தூக்கு போட்டு உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். அக்கம் பக்கத்தினர்கள் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்து விட்டு வழியிலேயே சஞ்சய் இறந்து விட்டதாக கூறினார்கள். இது குறித்து இரணியல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.



