மார்த்தாண்டம், ஆக. 3 –
43 வது சுதந்திர தின விழா வரும் 15 ம் தேதி மக்கள் உற்சாகமாக கொண்டாட உள்ள நிலையில்,
மார்த்தாண்டம் அருகே பயணம் பகுதியில் அமைந்துள்ள பயணம் இளையோர் மன்றம் சார்பில் கலை மற்றும் இலக்கியம், நூலகம் மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அப்துல்கலாமுடன் பணியாற்றிய முன்னாள் விஞ்ஞானி இளங்கோவன் மரக்கன்றுகள் நட்டும் மாணவ மாணவிகளுக்கு வழங்கியும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ஏர் ஆம்புலன்ஸ் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். வருடத்திற்கு உடனடி சிகிச்சை கிடைக்காததால் 8 லட்சத்து 61 ஆயிரம் பேர் இறந்து போகின்றனர். ஏனென்றால் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாததால் இந்த இறப்புகள் ஏற்படுகிறது.
இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வருடத்திற்கு 22 ஆயிரம் பேர் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் இறந்து போகின்றனர். தற்போது இந்தியாவில் 49 ஏர் ஆம்புலன்ஸ் உள்ளதில் டெல்லியில் மட்டும் 39 உள்ளது. தமிழ் நாட்டில் ஒன்றும் இல்லை. இது இருந்தால் பேரிடர் காலத்தில் ஏஐ தொழினுபதுடன் மீனவர்கள் கடலில் எந்த பகுதியில் இருக்கின்றனர் என்பதை கண்டறிந்து உடனே மீட்க முடியும். சாட்டிலைட் யார் வேண்டுமானாலும் பண்ணலாம். ஆனால் இதை ஏவும் ராக்கெட் பண்ணுவது தான் சிரமம்.
உலகிலே இந்தியா உட்பட எட்டு நாடுகளில் தான் ராக்கெட் ஏவுகின்றனர். 2025 இல் உலகம் முழுவதும் இதிலிருந்து 250 ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. அதில் 200 ராக்கெட்டுகள் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டது. 50 ராக்கெட்டுகள் மற்ற நாடுகளில் இருந்து சென்றன. அதிலும் அமெரிக்காவில் இருந்து நாசா 7 ராக்கெட்டுகள் மட்டுமே அனுப்பியது. மீதம் எலன் மாஸ்க் -ன் தனியார் நிறுவனம் அனுப்பியது. ஆனால் தற்பொழுது இஸ்ரோ 200 சாட்டிலைட்டுகளை அனுப்புவோம் என சேர்மன் நாராயணன் கூறி உள்ளார். ஆனால் இந்த வருடம் ஒரு ராக்கெட் கூட அனுப்பவில்லை. 100 ராக்கெட்டுகள் அனுப்ப இந்தியா 43 வருடங்கள் எடுத்துள்ளது. எனவே ராக்கெட் ஏவுவதில் தனியார் பங்களிப்பு என்பது நல்லது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தார்.



