தஞ்சாவூர், ஜூலை 30 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் சுய வேலைவாய்ப்பு மூலம் சுய வேலைவாய்ப்பு பயிற்சி பெற இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்திருப்பதாவது: மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறை உதவியுடன் ஒவ்வொரு மாவட்டத்தில் முன்னோடி வங்கிகள் மூலம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் நிர்வாகிக்கப்படுகின்றன.
இதில் வேலை வாய்ப்புகளை அதிகம் வழங்கிடும் பயிற்சிகளான கைப்பேசி பழுது நீக்குதல், ஓட்டுநர் உரிமம் பயிற்சி, வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்குதல், கான்கிரீட், கொத்தனார் பயிற்சி, பிளம்பிங் பயிற்சி, தச்சு பயிற்சி, இருசக்கர வாகன பழுது நீக்குதல், ஒயரிங், வெல்டிங் பயிற்சி, போட்டோகிராபி, வீடியோகிராபி, உள்பட 64 வகையான சுய வேலை வாய்ப்பு பயிற்சிகள் எவ்வித கட்டணமும் இல்லாமல் 15 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட கிராமப் புற இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதியாக குறைந்தது 8ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. கிராமப்புற இளைஞர்கள் தங்க ளுக்கு ஏற்றதொழில் பயிற்சிகளில் சேர்ந்து பயன்பெற விரும்பினால் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குனர், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், எண்.4 பக்கிரி சாமி தெரு, ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613004. (கைபேசி எண் 9080216079) (தொலைபேசி எண் 04362-242377) மற்றும் இணை இயக்குனர்/திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகம், எண் 223 இரண்டாம் தளம் மாவட்ட ஆட்சியரகம் தஞ்சாவூர் 613010. (கைபேசி எண் 9444094368) தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.



