திருப்பத்தூர்:ஜூன்:15, வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்று உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் அந்த மனுக்களில் உள்ள கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர் ஆகியோரிடம் இது குறித்த கணக்குகளையும் மற்றும் விவரங்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் கேட்டறிந்தார். உடன் தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) ஃபெலிக்ஸ் ராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்) இராஜராஜன் , பல்வேறு துறை சார்ந்த மாவட்ட அலுவலர்கள், வட்டாட்சியர், அலுவலக பணியாளர்கள் பலர் உள்ளனர்.



