தருமபுரி, ஜூலை 30 –
தருமபுரி மாவட்டம் மாட்லாம்பட்டி தனியார் கல்லூரியில் இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், தருமபுரி மை பாரத் கேந்திரா மற்றும் தனியார் கல்லூரி சார்பில் நாஷா முக்த் யுவா – விக்சித் பாரத் – போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற கருப்பொருளில், போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மரகதம் வெற்றிவேல் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர் . நிகழ்ச்சியில் குழு நடன நிகழ்ச்சி, ஓவிய போட்டி, பேச்சுப்போட்டி, விவாத போட்டி, போன்ற பல்வேறு போட்டிகள் போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதைப் பொருள் இல்லாத வாழ்க்கை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மை பாரத் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மை பாரத் தருமபுரி அலுவலக பணியாளர் முனியப்பன், அதியமான் டிவி நிறுவனர் கபில்தேவ், மை பாரத் தேசிய இளைஞர் தொண்டர்கள் வெங்கடேஷ், பாவல் ராஜ், விக்னேஸ்வரி, ரேவதி, ராதா, முருகன், சௌமியா, கிருஷ்ணதேவன், சௌமியா, முருகன், பெருமாள், மோகன், ஜோதிமணி, பிரணவ் ராஜ், மாலினி, அம்பிகா, பாலாஜி, பசுபதி, சுகன்யா, கீதா ஐயன்துரை, சமூக ஆர்வலர் ஞானவேல், விஷ்ணு, ஆகியோர் கலந்து கொண்டனர்.



