கோவை, ஜூலை 27 –
கோவை காரமடை காணியப்பா திருமண மண்டபத்தில் கலைப்பிரியர்கள் அறக்கட்டளையின் சார்பாக, நடைபெற்ற 35வது ஆண்டு விழா (மற்றும்) விருது வழங்கும் விழாவில் மேட்டுப்பாளையம் வட்டம் சிறுமுகையைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் சமூக ஆர்வலர் நோபல் உலக சாதனையாளர் டி.அறிவழகன் என்பவருக்கு விளையாட்டுத்துறையில் அவருடைய சாதனைகள் (மற்றும்) இரத்த தானம் செய்தல்/ மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல் போன்ற சமூகப் பணிகளை பாராட்டி இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு (மற்றும்) பாண்டிச்சேரி மாநில வழக்கறிஞர்கள் சங்க கூட்டுக் குழுவின் துணைத் தலைவர் அரிமா ஆர் சீனிவாசன், டி. அறிவழகனுக்கு “சேவை செம்மல் விருதினை” வழங்கி இவருடைய சமூகப் பணிகள் தொடரவும் மேலும் எதிர்கால உலக சாதனை முயற்சிகள் வெற்றி பெறவும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் கலைப் பிரியர்கள் அறக்கட்டளையின் நிறுவனர் ஆர் நடராஜன், கலாம் விதைகள் அறக்கட்டளையின் நிறுவனர் சி கணிஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



