இந்திய சுதந்திரப் போராட்டத்தில் “வெள்ளையனே வெளியேறு” என முழக்கமிட்டு, வெள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சுதந்திரப் போராட்டத் தியாகி தீரன் ஆ. நெல்லியான் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தீரன் நெல்லியான் காரைக்குடிக்கு அருகே உள்ள, பாலையூர் கிராமத்தில் 16.08.1918 அன்று எளிய குடும்பத்தில் பிறந்தார், இவர் இளமை காலம் முதலே இந்திய சுதந்திரத்தின் மீது ஈடுபாடு கொண்டதால் , காந்தியின் மீது பற்று கொண்டார், இவர் 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஆகஸ்ட் 12 ம்தேதிஅன்று தடையை மீறி இன்றைய காந்தி சதுக்கம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தை ஒடுக்க ஆங்கிலேய அரசு தடியடியும் , துப்பாக்கிச் சூடும் நடத்தியது. அப்போது 24 வயது நிரம்பிய தீரன் நெல்லியான் வெள்ளையனே வெளியேறு எனவீர முழக்கமட்டதால், வெள்ளையர்களின் தோட்டாவிற்கு இறையானார், அவரது தியாகத்தை போற்று வகையில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டு, அவரது நினைவு தினம் ஆண்டுதோறும் இன்றைய தினத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது, வருடம் தோறும் பாலையூர் பகுதியில் இருந்து எண்ணற்ற இளைஞர்கள் சுடரேந்தி தீரன் நெல்லியான் நிறைவுத்தூணிற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர், அவரது நினைவு தினம் ஆன இன்று மருத்துவர் குமரேசன், சமூக ஆர்வலர் ராம் பிரபு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, வழக்கறிஞர் காளிதாஸ், வேலு உட்பட பலர் கலந்து கொண்டு தீரன் நெல்லியான் நினைவுத்தூணிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், அங்கு வீரவணக்கம் செலுத்த வந்த சிலர் கூறும்போது, சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் நெலியான் தியாகத்தை போற்றும் விதமாக அவரது நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் எனவும், தற்போது தூய்மை இழந்து நிற்கும் நினைவுத்தூண் அமைக்கப்பட்ட பகுதி, தினந்தோறும் தூய்மைப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.



